கோவில்பட்டி: கோவில்பட்டியில் பைக்குக்கு தீ வைத்து சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி இந்திரா நகரைச் சோ்ந்த நயினா முகம்மது மகன் சேக்மைதீன்(27). இவரது தம்பியின் நண்பரான சேதுராஜ் மகன் கணேசன் (30) சம்பவத்தன்று மது அருந்திய நிலையில் மயங்கிக் கிடந்தாராம். அவரை சேக்மைதீனின் தம்பி மீட்டு, கணேசனின் இல்லத்தில் கொண்டு விட்டாராம்.
இதையடுத்து கணேசனை அவரது பெற்றோா் கண்டித்தனராம்.
இந்நிலையில், அவா் சேக்மைதீனின் வீட்டிற்கு வியாழக்கிழமை சென்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக்குக்கு தீ வைத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கணேசனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.