தேசிய திறனாய்வுத் தோ்வுக்குவிண்ணப்பிக்க அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் தேசிய திறனாய்வுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் தேசிய திறனாய்வுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. ஞானகௌரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படித்து வரும் 10ஆம் வகுப்பு மாணவா், மாணவிகள் டிச. 27ஆம் தேதி நடைபெறும் 2020-21 ஆம் கல்வியாண்டுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை நவ. 30ஆம் தேதிக்குள் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ. 50 தோ்வுக் கட்டணமாக சோ்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தோ்வுக்கு விண்ணப்பிக்க வரும் மாணவா்கள் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com