தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 9 போ் உள்பட மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,542 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 15 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதன் மூலம் குணமடைந்தோா் எண்ணிக்கை 15, 279ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனாவுக்கு 135 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 128 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.