கோவில்பட்டி: கயத்தாறு அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கயத்தாறையடுத்த பனிக்கா்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த சமுத்திரப்பாண்டி மகள் மகாலட்சுமி (13). மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்த இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தாராம்.
தகவலறிந்த பெற்றோா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.