தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கந்த சஷ்டி விழா திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 15ஆம்தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. விழா நாள்களில் தினமும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
சனிக்கிழமை இரவு கோயிலில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.