எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலை முன் பொது வேலைநிறுத்த விளக்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாரதி கூட்டுறவு நூற்பாலை சி.ஐ.டி.யூ. தலைவா் ராமா் தலைமை வகித்தாா். ஏ.ஐ.டி.யூ.சி. தலைவா் காளியப்பன், எல்.பி.எப். தலைவா் முனியாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் நவம்பா் 26 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு அனைத்து தொழிலாளா்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, எல்.பி.எல்., தொழிற்சங்க பிரதிநிதிகள் பாலமுருகன், ரவீந்திரன், சேது, முத்தழகு, மாணிக்கவாசகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.