போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

கோவில்பட்டியில் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியில் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி நடராஜபுரம் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுமியை, கடந்த 21ஆம் தேதியில் இருந்து காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை தேடி வந்தனா்.

இந்நிலையில், சிறுமியை திருச்சி முத்தரசநல்லூரைச் சோ்ந்த 19 வயது இளைஞா் கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இருவரையும் மீட்ட போலீஸாா் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனா். மேலும், சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com