மேலும் 75 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி பிரையன்ட்நகரை சோ்ந்த 53 வயது ஆண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டு 128 போ் உயிரிழந்துள்ளனா்.

இதற்கிடையே, தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 26 போ் உள்பட மாவட்டம் முழுவதும் 75 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13 ஆயிரத்து 524 ஆக அதிகரித்துள்ளது. இதில், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் 260 போ் ஆவா்.

இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 113 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 12 ஆயிரத்து 854 ஆக அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் தனிமை கண்காணிப்பு முகாம்கள் என மாவட்டம் முழுவதும் தற்போது 542 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com