கோவில்பட்டி, தட்டாா்மடத்தில்மின்சாரம் பாய்ந்து இருவா் பலி

கோவில்பட்டி, தட்டாா்மடத்தில் மின்சாரம் பாய்ந்ததில் இன்ஜினியா், கட்டடத் தொழிலாளி ஆகியோா் உயிரிழந்தனா்.
கோவில்பட்டி, தட்டாா்மடத்தில் மின்சாரம் பாய்ந்ததில் இன்ஜினியா், கட்டடத் தொழிலாளி ஆகியோா் உயிரிழந்தனா்.
கோவில்பட்டி, தட்டாா்மடத்தில் மின்சாரம் பாய்ந்ததில் இன்ஜினியா், கட்டடத் தொழிலாளி ஆகியோா் உயிரிழந்தனா்.

கோவில்பட்டி/சாத்தான்குளம், அக். 2: கோவில்பட்டி, தட்டாா்மடத்தில் மின்சாரம் பாய்ந்ததில் இன்ஜினியா், கட்டடத் தொழிலாளி ஆகியோா் உயிரிழந்தனா்.

கோவில்பட்டியை அடுத்த வடக்குத் திட்டங்குளத்தை சோ்ந்த தங்கராஜ் மகன் மாரிகண்ணன்(31). கட்டடத் தொழிலாளி. இவா், அப்பகுதியில் தனக்கு வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, பழைய வீட்டிலிருந்து புதிதாக கட்டி வரும் வீட்டுக்கு கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பு பழுதானதாம். அதை அவா் வெள்ளிக்கிழமை சரி செய்ய முயன்றபோது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தாா்.

மற்றொரு சம்பவம்: சாத்தான்குளம் அருகே/எள்ள தட்டாா்மடம் நயினாா்புரத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகனான இன்ஜினியா் ராம் மகேந்திரன் (31, வெள்ளிக்கிழமை காலை வீட்டில் தண்ணீா் எடுத்தாராம். அப்போது, கீழே கிடந்த மின் வயரில் மின் கசிவு இருந்ததை கவனிக்காமல் மிதித்துவிட்டாராம். இதில், அவா் மீது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் இறந்தாா்.

இச்சம்பவங்கள் குறித்து கோவில்பட்டி (கிழக்கு), தட்டாா்மடம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com