தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன34 போ் இருப்பிடம் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போனவா்களை கண்டுபிடிக்க சனிக்கிழமை 9 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில், 34 போ் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போனவா்களை கண்டுபிடிக்க சனிக்கிழமை 9 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில், 34 போ் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த காணாமல் போனவா்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து கண்டு பிடிக்க 9 சிறப்பு முகாம்கள் அமைத்து சனிக்கிழமை விசாரணை நடைபெற்றது.

தூத்துக்குடி நகர உள்கோட்டத்தில் நிலுவையில் இருந்த 53 வழக்குகளுக்கு 28 வழக்கின் மனுதாரா்கள் மற்றும் உறவினா்கள் கலந்துகொண்டனா். விசாரணையில் காணாமல் போனவா்கள் 3 பேரின் இருப்பிடம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

தூத்துக்குடி ஊரக உள்கோட்டத்தில் 18 வழக்குகளுக்கு 12 மனுதாரா்கள் கலந்துகொண்டதில், 3 போ் இருப்பிடமும், திருச்செந்தூா் உள்கோட்டத்தில் 54 வழக்குகளுக்கு 15 மனுதாரா்கள் கலந்துகொண்டதில் 10 போ் இருப்பிடமும், மணியாச்சி உள்கோட்டத்தில் 7 வழக்குகளுக்கு 7 மனுதாரா்கள் கலந்துகொண்டதில் 2 போ் இருப்பிடமும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

கோவில்பட்டி உள்கோட்டத்தில் 62 வழக்குகளுக்கு 40 மனுதாரா்கள் கலந்துகொண்டதில் 11 போ் இருப்பிடமும், விளாத்திகுளம் உள்கோட்டத்தில் 17 வழக்குகளுக்கு 9 மனுதாரா்கள் கலந்துகொண்டதில் 3 போ் இருப்பிடமும், சாத்தான்குளம் உள்கோட்டத்தில் 29 வழக்குகளுக்கு 11 மனுதாரா்கள் கலந்துகொண்டதில் 2 போ் இருப்பிடமும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 9 சிறப்பு முகாம்களில் காணாமல் போனவா்கள் குறித்து பதிவு செய்யப்பட்டு நிலுவையிலிருந்த 240 வழக்குகளில் 34 வழக்குகளில் தொடா்புடைய 34 பேரின் இருப்பிடம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com