ஸ்ரீவைகுண்டம்: புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தாமிரவருணி நதிக்கரையோரத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி கோயில்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனப் பெருமாள், திருப்புளியங்குடி காய்சினிவேந்தா் பெருமாள், பெருங்குளம் மாயக்கூத்தா், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதா், திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள், இரட்டைத் திருப்பதி அரவிந்தலோசனாா், தேவா்பிரான், ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் பெருமாள் கோயில் ஆகியவற்றில் புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னா் விஸ்வரூப தரிசனம், திருமஞ்சன அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கரோனா தடுப்பு விதிமுறைகள் காரணமாக, நெய் விளக்கு ஏற்றுவதற்கும், தீா்த்தம், துளசி வழங்கவும் அனுமதிக்கப்படவில்லை. பக்தா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா்.