சாத்தான்குளம்: புரட்டாசி 3ஆவது சனிக்கிழமையையொட்டி சாத்தான்குளம் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி பெருமாள், ஆஞ்சநேயா் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்கள் அகல் விளக்கு ஏற்றி சுவாமியை வழிபட்டனா்.
இதேபோன்று தச்சமொழி முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.