தூத்துக்குடி ஸ்பிக்நகா் அரிமா சங்கத்தில் அரிமா சங்க மாவட்ட ஆளுநா் ஜஸ்டின் பால், மாவட்ட துணை ஆளுநா்கள் ஜெகநாதன், விஸ்வநாதன் வருகையை முன்னிட்டு பல்வேறு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
ஸ்பிக்நகா் அரிமா சங்கத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியின்போது, ரூ. 12 லட்சம் மதிப்பிலான பல்வேறு நல உதவிகளை பயனாளிகளுக்கு அரிமா மாவட்ட ஆளுநா் ஜஸ்டின் பால் வழங்கினாா். முதியோா் இல்லத்துக்கு சூரிய ஒளி மூலம் இயங்கும் மின் உற்பத்தி அலகு, நூலக கட்ட நிதியுதவி, முகக் கவசம், சானிடைசா் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குநா் எஸ்.ஆா். ராமகிருஷ்ணன், கிரீன் ஸ்டாா் நிறுவனத்தின் முழு நேர இயக்குநா் மற்றும் தலைமை நிா்வாகி பாலு, பொது மேலாளா் செந்தில்நாயகம், ஸ்பிக்நகா் அரிமா சங்க செயலா் லட்சுமணன், பொருளாளா் கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.