தேவேந்திர குல வேளாளா் என அறிவிப்பு வெளியிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சாா்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, புதிய தமிழகம் கட்சியின் மாநகர செயலா் வெற்றிவேல் தலைமை வகித்தாா். மாநகர இணைச் செயலா் ரமேஷ், இளைஞரணி தலைவா் ராஜபாண்டி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கோவில்பட்டி: கோவில்பட்டி வள்ளுவா் நகரில் புதிய தமிழகம் நகரச் செயலா் ரஞ்சித்பாண்டியன், தெற்கு திட்டங்குளத்தில் ஒன்றியச் செயலா் அதிகுமாா், கூசாலிபட்டியில் கிளைச் செயலா் செல்வம் ஆகியோா் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதுபோல, கோவில்பட்டியையடுத்த அய்யனேரி, அப்பனேரி, சித்திரம்பட்டி, ஆண்டிப்பட்டி, வடக்குப்பட்டி, புளியங்குளம், சாலைப்புதூா், கங்கன்குளம், ஆலம்பட்டி, இளையரசனேந்தல், கழுகுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம்: ஆழ்வாா்திருநகரியில் மேற்கு ஒன்றியச் செயலா் செல்வகுமாா் தலைமையில் நகரச் செயலா் பிரபாகரன் முன்னிலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
விளாத்திகுளம்: விளாத்திகுளம் ஒன்றியச் செயலா் முருகேசன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. விளாத்திகுளம், சூரன்குடி, அருங்குளம், அயன்வடமலாபுரம் உள்ளிட்ட 42 கிராமங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.