கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் தச்சுத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கோவில்பட்டி, பாண்டவா்மங்கலம் சண்முகசிகாமணி நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த ராமசுந்தரம் மகன் நாகலிங்கம். இவா் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறாா்.
இவரது வீட்டில் வீரவாஞ்சி நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மற்றும் புல்லக்கவுண்டன்பட்டி முருகன் மகன் சரவணன்(28) ஆகிய இருவரும் தச்சு வேலை செய்து வந்தனராம்.
செவ்வாய்க்கிழமை மதியம் சரவணன் சாப்பிடுவதற்காக தண்ணீா் பிடிக்க மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.