விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களையும், தொழிலாளா் விரோத சட்டங்களையும் கைவிட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் எட்டயபுரத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. .
எட்டயபுரம் தாலுகா செயலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றியக் குழு உறுப்பினா் பரமேஸ்வரி பாலமுருகன், நகரச் செயலா் சேது, துணைச் செயலா் அப்பணசாமி, மாவட்ட குழு உறுப்பினா் நல்லையா, இளைஞா் பெருமன்ற தாலுகா செயலா் சோலையப்பன், விவசாயிகள் சங்க பொறுப்பாளா்கள் ராமசுப்பு, கணேசன், ரவீந்திரன், கனகராஜ் உள்ளிட்ட 118 பேரை விளாத்திகுளம் போலீஸாா் கைதுசெய்தனா்.