எட்டயபுரம் நகர திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலா் நவநீத கண்ணன் தலைமை வகித்தாா். எட்டயபுரம் நகரச் செயலா் பாரதி கணேசன், மேற்கு ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், வடக்கு மாவட்ட பொறுப்பாளா் கீதாஜீவன் எம்.எல்.ஏ., விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.
மேலக்கரந்தை பாலகிருஷ்ணன் தலைமையில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி 50-க்கும் மேற்பட்டோா் கீதாஜீவன் எம்.எல்.ஏ. முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
தூத்துக்குடி மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலா்கள் சின்ன மாரிமுத்து, செல்வராஜ், மும்மூா்த்தி, விளாத்திகுளம் நகரச் செயலா் இரா.வேலுச்சாமி, மருத்துவா் சௌந்தரராஜன், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் சூா்யாராஜ், பொதுக்குழு உறுப்பினா் ராஜா கண்ணு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.