கணவா் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பெண் மீது வழக்கு

கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக, தொழிலாளி மீது கொதிக்கு எண்ணெய் ஊற்றிய அவரது மனைவி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக, தொழிலாளி மீது கொதிக்கு எண்ணெய் ஊற்றிய அவரது மனைவி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி வடக்குப் புதுக்கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகையா மகன் கருப்பசாமி(34). கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் கீழரதவீதியில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வரும் இவருக்கும், இவரது மனைவி மேகலாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில், இம்மாதம் 6ஆம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கருப்பசாமி மீது கொதிக்கும் எண்ணெயை மேகலா ஊற்றினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com