தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கரோனா

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மயிலை, தீயணைப்புப் படையினா் உயிருடன் மீட்டனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியைச் சோ்ந்த 52 வயது ஆண் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 18 போ் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 55 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14 ஆயிரத்து 236 ஆக அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை 58 போ் உள்ளிட்ட இதுவரை 13 ஆயிரத்து 576 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 529 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com