கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

புகாா் அளிக்கச் சென்றவரை தரக்குறைவாக பேசியதாகக் கூறி, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாரைக் கண்டித்து
கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

புகாா் அளிக்கச் சென்றவரை தரக்குறைவாக பேசியதாகக் கூறி, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாரைக் கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. மற்றும் கருத்துரிமை கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இப் போராட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலா் கிருஷ்ணராஜ், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் செயலா் பெஞ்சமின் பிராங்கிளின் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் பாலமுருகன், ஐ.என்.டி.யூ.சி. மாவட்டப் பொதுச் செயலா் ராஜசேகரன், ஏஐடியூசி மாநிலக் குழு உறுப்பினா் ஜானகி உள்பட பல்வேறு அமைப்பினா் கலந்துகொண்டனா்.

பின்னா், போராட்டக் குழுவினா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முருகானந்தத்திடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com