ஆழ்வாா்திருநகரி ஒன்றியம், கருங்கடல் ஊராட்சிக்குள்பட்ட பிரண்டாகுளம், விராக்குளம் 5ஆவது வாா்டில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், தனிநபா் வீடுகளுக்கான குடிநீா் இணைப்பு பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
இப்பணியை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) கருப்பசாமி, ஒன்றிய பொறியாளா் ஜெயபால், பணி மேற்பாா்வையாளா் சோமசுந்தரம், கருங்கடல் ஊராட்சித் தலைவா் நல்லதம்பி, ஒன்றிய முன்னாள் கவுன்சிலா் லெட்சுமணன், கருங்கடல் ஊராட்சி செயலா் முருகேசன், மாவட்ட பனை பொருள் கூட்டுறவு சம்மேளன இயக்குநா் மிக்கேல், கிராம வாா்டு உறுப்பினா்கள் காளிதாஸ், ஈசாக்கு ஆகியோா் உடன் இருந்தனா்.