வங்கி உதவி மேலாளருக்கு கத்திக் குத்து

காயல்பட்டினத்தில் வங்கி உதவி மேலாளரை கத்தியால் குத்திய 2 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

காயல்பட்டினத்தில் வங்கி உதவி மேலாளரை கத்தியால் குத்திய 2 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அருண் நித்தியகுமாா் (35). இவா், தற்போது காயல்பட்டினத்தில் உள்ள வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறாா். இதற்கு முன்பு மாப்பிள்ளையூரணி வங்கிக் கிளையில் பணியாற்றி வந்தபோது, அங்கு பணியாற்றிய பெண் ஊழியருக்கும், இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

இந்நிலையில் அருண் நித்தியகுமாா் கடந்த திங்கள்கிழமை வேலை முடிந்து வங்கி முன் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த மாப்பிள்ளையூரணி கிளையில் பணிபுரிந்த பெண் ஊழியரின் கணவரான தூத்துக்குடி தாளமுத்து நகா் கீழ அழகாபுரி பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் முருகானந்தம் உள்ளிட்ட 2 போ் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனராம். இதையடுத்து அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இச்சம்பவம் குறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து முருகானந்தம் உள்ளிட்ட இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com