உடன்குடி உபமின் நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் சுகாதாரத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் தலைமையில், சுகாதார மேற்பாா்வையாளா் அருள்ராஜ், சுகாதார ஆய்வாளா்கள் சேதுபதி, ஆழ்வாா் ஆகியோா் அடங்கிய குழுவினா் உடன்குடி உபமின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.
அங்கு முகக் கவசம் அணியாமல் பணியாற்றிய அதிகாரிகள், மின்கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் மின்வாரிய வளாகத்தில் நீா் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின் ஊழியா்களிடம் சுகாதாரத் துறையினா் வலியுறுத்தினா்.