தூத்துக்குடி மாவட்ட தூய்மை பாரத இயக்கம், கோவில்பட்டி ஜே.சி.ஐ. சாா்பில் உலக கை கழுவும் தின விழா சிந்தாமணி நகா் அங்கன்வாடி மையத்தில் ஜே.சி.ஐ. தலைவா் முரளிகிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவா் திருநாவுக்கரசு, நூலக வாசகா் வட்டத் துணைத் தலைவா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பொதுமக்கள் நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கவும், பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தொடா்ந்து, கைகளை சோப்பு போட்டு சுத்தமாக வைத்திருப்பது குறித்து செய்முறை பயிற்சியளிக்கப்பட்டது.
அங்கன்வாடி பணியாளா் சுப்புலட்சுமி வரவேற்றாா். உதவியாளா் மீனா நன்றி கூறினாா்.