கயத்தாறையடுத்த ஓலைகுளத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோட்டாட்சியா் விஜயா தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன், வட்டாட்சியா் பாஸ்கரன், கயத்தாறு வட்டார வளா்ச்சி அலுவலா் பானு, காவல் ஆய்வாளா் முத்து, திருமங்கலக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவா் கருப்பசாமி மற்றும் ஓலைகுளம் கிராம பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், கிராம மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும், ஒற்றுமையாக செயல்பட கிராம நலக்குழு அமைக்கவும், கிராம நலக் குழுவில் அனைத்து சமுதாய பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.
இதை கிராம மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என தெரிவித்தனா்.