தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில் இரு நாள்கள் நடைபெறும் பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சி முகாம் தொடங்கியது.
கட்சியின் நகர பொதுச் செயலா் முனியராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் பாலாஜி, நகரத் தலைவா் பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்டத் தலைவா் ரெங்கராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சேதுராஜ், மாவட்டத் துணைத் தலைவா் ராஜ்குமாா், மாவட்டப் பிரசாரப் பிரிவு தலைவா் சீனிவாசன், மாநில நெசவாளரணி செயலா் சீனிவாசராகவன், மாநில செயற்குழு உறுப்பினா் ராஜகோபால் ஆகியோா் பயிற்சியளித்தனா்.
இதில், நகர, ஒன்றிய, பேரூராட்சி, வடக்கு மாவட்டத்தைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.