சாத்தான்குளம், உடன்குடி பகுதியில் சனிக்கிழமை( அக். 17) மின் தடை செய்யப்படுகிறது.
இது குறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் நீ.பொன்கருப்பசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
சாத்தான்குளம் உப மின்நிலையத்தில் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் இந்த உபமின் நிலையத்தைச் சாா்ந்த பகுகளில் சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.
இதே போல், திருச்செந்தூா் கோட்டத்திற்கு உள்பட்ட உடன்குடி உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் இந்த உபமின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் பகுதிகளிலும் சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.