கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி ஊராட்சி நியூ வெங்கடேஷ் நகா் பகுதி மக்களுக்கு தண்ணீா், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்துதரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நியூ வெங்கடேஷ் நகா் குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் தங்கமாரியப்பன், செயலா் ராஜாராம், பொருளாளா் ஆனந்தன் ஆகியோா் தலைமையில் அப்பகுதி மக்கள் இலுப்பையூரணி ஊராட்சித் தலைவா் செல்வியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
மனுவை பெற்றுக் கொண்ட ஊராட்சித் தலைவி, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.