தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்த 21 போ் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 43 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,325 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவந்த 42 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 13,665ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 131 போ் உயிரிழந்துள்ளனா். 529 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.