மரக்கன்று நடும் விழா

பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் கோவில்பட்டியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் கோவில்பட்டியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

கட்சியின் மாநில இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸின் 52ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் ராமச்சந்திரன் தலைமையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கட்சியினா் கோயில் வளாகத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தனா். பின்னா் நகரின் முக்கிய இடங்களில் மரக்கன்றுகளை நட்டனா்.

இதில், கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவா் மகாராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் வேல்சாமி, மாவட்டத் தலைவா் மாடசாமி, மாவட்ட அமைப்புச் செயலா் காளிராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com