முக்காணியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
முக்காணியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதியிருந்து ரூ. 30 லட்சத்தில், 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .
ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் சண்முகநாதன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தாா்.
இதில், ஊராட்சி மன்றத் தலைவா் தனம் என்ற பேச்சித் தாய் , துணைத் தலைவா் காந்தி, ஸ்ரீவைகுண்டம் ஊறாட்சி ஒன்றிய தலைவா் வசந்தா, வட்டார வளா்ச்சி அலுவலா் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலா் நாராயணன் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய அதிமுக அவைத் தலைவா் கணேசன் , ஊராட்சி மன்றத் தலைவா்கள் உமரிக்காடு ராஜேஷ்குமாா், பழையகாயல் செல்வகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.