வீரபாண்டியன்பட்டணத்தில் பெட்ஸ் டிரஸ்ட் உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நிறுவனா் ஜாண்சுரேஷ் தலைமை வகித்தாா். இயக்குநா் ஸ்டாா்வின், செயலா் மெஸினா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பொருளாதார வசதி இல்லாத காரணத்தினால் படிப்பை தொடர முடியாமலும், அரசு தோ்வுத் துறைக்கு உள் நுழைய முடியாமலும் தவிக்கும் மாணவா்களுக்கு உதவுவது குறித்தும், டிரஸ்ட் மூலம் ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மாணவா்களின் வளா்ச்சி குறித்தும், அவா்களின் திறன் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மாணவா்களுக்கு கரோனா சாா்ந்த விழிப்புணா்வுகளை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். ஆசிரியை அக்ஸிலியா நன்றி கூறினாா்.