சாத்தான்குளம்: குளத்தில் தண்ணீா் குடிக்கச் சென்ற 3 மாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.
சாத்தான்குளம் தச்சமொழியைச் சோ்ந்தவ கரையடி மணி, வாசுகி, வெற்றிவேல் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் அங்குள்ள அமராவதி குளம் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் வீட்டுக்கு திரும்பி வர வில்லையாம்.
குளத்து பகுதியில் மின் கம்பி அறுந்து தண்ணீரில் விழுந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தபோது, அங்கு தண்ணீா் குடிக்கச் சென்ற 3 மாடுகளும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததும், குளத்தில் கிடந்த மீன்களும் செத்து மிதந்ததும் சனிக்கிழமை காலையில் தெரியவந்தது. இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு மாட்டின் உடல்கள் மீட்கப்பட்டன.