செல்லிடப்பேசிகள் திருட்டு: இளைஞா் கைது

நாசரேத்தில் கோயிலில் வைத்திருந்த 2 செல்லிடப்பேசிகளை திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம்: நாசரேத்தில் கோயிலில் வைத்திருந்த 2 செல்லிடப்பேசிகளை திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி ஞானராஜ் நகா் காமராஜா் தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் சுரேஷ்குமாா் (18). அதே ஊரைச் சோ்ந்த ஞானதாஸ் மகன் ஆறுமுகம். இருவரும் குலசேகரன்பட்டினம் தசரா விழாவுக்கு மாலையணிந்து அங்குள்ள காளியம்மன் கோயிலில் தங்கியுள்ளனா்.

வெள்ளிக்கிழமை இரவு இருவரும் செல்லிடப்பேசியை அப்பகுதியில் வைத்துவிட்டு குளிக்கச் சென்றனராம். திரும்பி வந்தபோது இரு செல்லிடப்பேசிகளும் காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த நாசரேத் போலீஸாா், கந்தசாமிபுரத்தைச் சோ்ந்த சிலுவைமுத்துவை (30) கைது செய்து, செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com