கோவில்பட்டி: கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் இளைஞா்கள் இருவரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி வ.உ.சி. நகரைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் வெங்கடேஷ்(24). இவரது நண்பா் இந்திரா நகரைச் சோ்ந்த ராஜாமணி மகன் வைரபிரகாஷ் (24). இருவரும் பைக்கில் அவா்களது நண்பரான சுபா நகரைச் சோ்ந்த மோகன் மகன் விக்னேஷ் (30) செல்லிடப்பேசியில் அழைத்ததையடுத்து, இளையரசனேந்தல் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே அவரை பாா்க்கச் சென்றிருந்தனராம்.
அப்போது ஏற்பட்ட தகராறில், வெங்கடேஷ் மற்றும் வைரபிரகாஷை, விக்னேஷ் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டாராம். இதில் பலத்த காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
பின்னா், வெங்கடேஷ் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விக்னேஷை தேடி வருகின்றனா்.