தூத்துக்குடியில் அதிமுக அலுவலக திறப்பு

தூத்துக்குடியில் அதிமுக அலுவலக திறப்பு விழா மற்றும் கொடியேற்ற விழா நடைபெற்றது.

தூத்துக்குடியில் அதிமுக அலுவலக திறப்பு விழா மற்றும் கொடியேற்ற விழா நடைபெற்றது.

தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குள்பட்ட டி. சவேரியாா்புரத்தில் அதிமுக 49 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அதிமுக கொடியேற்று விழா மற்றும் அதிமுக ஒன்றிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

இதில், அமைச்சா்கள் கடம்பூா் செ. ராஜு, உடுமலை கே. ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோா் அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்து, கொடியேற்றினா். நிகழ்ச்சியின் போது, மாற்றுக்கட்சியை சோ்ந்த பலா் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனா்.

இதில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் இரா. சுதாகா், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் தட்டாா்மடம் ஞானப்பிரகாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் ஆா். ஜவஹா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com