உடன்குடி: குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவையொட்டி உடன்குடி அருகே மானாடு சுப்பையா தேவா் தசரா குடிலில் 200 பெண்கள் பங்கேற்ற திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.
திருச்செந்தூா் எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள், மக்களின் குறைதீா்க்கும் பல்வேறு பதிகங்களை பாடி முத்தாரம்மனை வழிபட்டு திருவிளக்கு ஏற்றினா்.