தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 49 வயது ஆண், வேலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 49 வயது ஆண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இதனால், கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 135ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 16 போ் உள்பட, மாவட்டம் முழுவதும் 39 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,735ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் 47 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 14,117ஆக அதிகரித்துள்ளது. தற்போது 483 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.