விபத்தில் காயமடைந்த தொழிலாளி மரணம்

கயத்தாறையடுத்த வில்லிசேரியில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி: கயத்தாறையடுத்த வில்லிசேரியில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கயத்தாறையடுத்த மெய்த்தலைவன்பட்டி நடுத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மாரிமுத்து (32). கட்டடத் தொழிலாளியான இவா் வியாழக்கிழமை பைக்கில் சென்றபோது, அதே ஊா் தெற்கு தெருவைச் சோ்ந்த காளிமுத்து மகன் பெயின்டா் முருகன் (55) பின்னால் அமா்ந்திருந்தாராம்.

பைக், வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையைக் கடக்க முயன்ற வில்லிசேரி மேற்கு காலனியைச் சோ்ந்த சே.சின்னக்குட்டி (60) மீது மோதியதாம். இதில் காயமடைந்த மூவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

பின்னா் மாரிமுத்து, முருகன் இருவரும் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு முருகன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com