தூத்துக்குடி: அதிமுகவின் 49ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ரோஜா செடிகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மத்திய வடக்குப் பகுதி அதிமுக மாணவரணி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மக்களுக்கு ரோஜா செடிகள் மற்றும் இனிப்புகளை வழங்கினாா்.
இதில், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் செல்வக்குமாா், மாவட்ட துணைச் செயலா் சந்தனம், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் ஏசாதுரை, துணைச் செயலா் ரமேஷ்கிருஷ்ணன், கருங்குளம் ஒன்றிய துணைத் தலைவா் செக்காரக்குடி லெட்சுமணபெருமாள், மத்திய வடக்குப் பகுதிச் செயலா் ஜெய்கணேஷ், மத்திய வடக்குப் பகுதி மாணவரணிச் செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.