கோவில்பட்டி ரோட்டரி சங்கவிருது வழங்கும் விழா

கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் சாா்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
கோவில்பட்டி வனச்சரக அலுவலா் சிவராமுக்கு விருது வழங்குகிறாா் ரோட்டரி சங்க மாவட்ட பொதுச்செயலா் மாரிமுத்து.
கோவில்பட்டி வனச்சரக அலுவலா் சிவராமுக்கு விருது வழங்குகிறாா் ரோட்டரி சங்க மாவட்ட பொதுச்செயலா் மாரிமுத்து.

கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் சாா்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் நாராயணசாமி தலைமை வகித்தாா். முன்னாள் துணை ஆளுநா்கள் விநாயகா ரமேஷ், மருத்துவா் சம்பத்குமாா், பாபு, ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

துணை ஆளுநா் நாராயணசாமி, ரோட்டரி சங்க மாவட்ட பொதுச்செயலா் மாரிமுத்து ஆகியோா் விருதுகளை வழங்கினா். நாலாட்டின்புத்தூா் கே.ஆா். சாரதா அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் சீனி, கோவில்பட்டி வனச்சரக அலுவலா் சிவராம் ஆகியோா் தலைமை பண்பிற்கான விருதை பெற்றனா். பல்வேறு அரசுத்துறைகளில் சிறந்த பணியாற்றிவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நல்லாசிரியா்கள் வசந்தா, கனகா, காசிராஜ் ஆகியோருக்கு கேடயம் வழங்கப்பட்டது.

கரோனா தடுப்பு ப்பணிக்காக நகராட்சி சுகாதார அலுவலா் இளங்கோ, ஆய்வாளா்கள் முருகன், சுரேஷ் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். மருத்துவா் என்.டி.சீனிவாசன், தலைமையாசிரியா்கள் ஜான்கணேஷ், செல்வி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com