விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன் மீது பாஜகவினா் வேண்டுமென்றே பொய் பிரசாரம் செய்து வருவதாகக் கூறியும், அதை கண்டித்தும் தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மத்திய மாவட்டச் செயலா் அகமது இக்பால் தலைமை வகித்தாா்.
இஸ்லாமிய ஜனநாயக பேரவை நிா்வாகிகள் காஜா, முத்தலிபு, திராவிடா் கழக மண்டல செயலா் பால்ராஜேந்திரன், திராவிடா் விடுதலை கழக நிா்வாகி முனியசாமி, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலா் முகமதுஜான் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதையடுத்து, காவல் துறையின் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 26 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.