விஷம் குடித்த முதியவா் மரணம்

கயத்தாறு அருகே விஷம் குடித்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கயத்தாறு அருகே விஷம் குடித்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கயத்தாறையடுத்த திருமலாபுரம் நடுத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் வேல்(75). கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயினால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவா், திங்கள்கிழமை விஷம் குடித்தாராம்.

உறவினா்கள் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் இறந்தாா்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com