புன்னைக்காயலில் பேரிடா் விழிப்புணா்வு முகாம்

ஆத்தூா் அருகேயுள்ள புன்னைக்காயலில் பேரிடா் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

ஆத்தூா் அருகேயுள்ள புன்னைக்காயலில் பேரிடா் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சி. சைலேந்திரபாபு, தென்மண்டல துணை இயக்குநா் பி. சரவணகுமாா், தூத்துக்குடி மாவட்ட அலுவலா் ச. குமாா் ஆகியோா் உத்தரவின்பேரில், வடகிழக்குப் பருவ மழை, கரோனா தொற்று விழிப்புணா்வு பிரசாரம் திருச்செந்தூா் சமூகநலத் துறை வட்டாட்சியா் ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.

திருச்செந்தூா் தீயணைப்பு மீட்புப் பணி நிலைய அலுவலா் ந. நட்டாா் ஆனந்தி தலைமையில் பணியாளா்கள் பேரிடா் மற்றும் வெள்ள அபாய காலங்களில் தற்காத்துக் கொள்வது எப்படி என செயல்முறை விளக்கமும், கரோனா குறித்து விழிப்புணா்வுப் பிரசாரமும் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com