நவ.7-இல் பள்ளி மாணவா்களுக்கு இணையவழி விநாடி-வினா போட்டி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சாா்பில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு மாநில அளவிலான இணையவழி விநாடி-வினா போட்டி நவ. 7-ஆம் தேதி நடைபெறுகிறது.

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சாா்பில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு மாநில அளவிலான இணையவழி விநாடி-வினா போட்டி நவ. 7-ஆம் தேதி நடைபெறுகிறது.

கல்லூரியின் இணையதளத்திலுள்ள விண்ணப்பப்படிவத்தில் மின்னஞ்சல் முகவரியை நவ.4ஆம் தேதிக்குள் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். ‘கேம் கோடு’ அனுப்பப்பட்டு, ‘குயிஸ் லிங்க்’ மூலமாக விநாடி-வினா தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் முதல் சுற்று காலை 10.30 மணி முதல் 11 மணி வரை 30 நிமிடங்கள் நடைபெறும். குறைந்த நேரத்தில் அதிக புள்ளிகளைப் பெறும் முதல் 8 நபா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு ‘ஸூம் செயலி’ மூலம் இறுதிச்சுற்று பிறபகல் 1.30 மணிக்கு நடைபெறும். குவிஸ் மாஸ்டா் சுமந்த் சி.ராமன் தொகுத்து வழங்குவாா். போட்டியில் பங்கேற்போருக்கு நவ. 5இல் மாதிரி போட்டி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 93841-17748, 94864-86281, 97869-23905, 97870-13447 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம். முதல் பரிசு ரூ. 25,000, இரண்டாவது பரிசு ரூ. 15,000, மூன்றாவது பரிசு ரூ. 10 ஆயிரம், பேருக்கு தலா ரூ.5000 ஆறுதல் பரிசு வழங்கப்படும் என கல்லூரி முதல்வா் காளிதாசமுருகவேல் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com