ஸ்ரீ சங்கரகோமதி அம்பாள் கோயிலில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டி கோமதி நகரிலுள்ள அருள்மிகு அன்னை ஸ்ரீ சங்கரகோமதி அம்பாள் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி கோமதிநகரில் உள்ள அன்னை ஸ்ரீ சங்கரகோமதி அம்பாள் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.
கோவில்பட்டி கோமதிநகரில் உள்ள அன்னை ஸ்ரீ சங்கரகோமதி அம்பாள் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

கோவில்பட்டி கோமதி நகரிலுள்ள அருள்மிகு அன்னை ஸ்ரீ சங்கரகோமதி அம்பாள் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி அத்தைகொண்டான் கோமதிநகரிலுள்ள அன்னை ஸ்ரீ சங்கரகோமதி அம்பாள் ஸ்ரீ கருமாரி அம்பாள் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி சனிக்கிழமை மாலையில் யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை, பூா்ணாஹுதி தீபாராதனை, இரவில் யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன சமா்ப்பணம் ஆகியவை நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலையில் 2ஆம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தனம், மகா பூா்ணாஹூதியை தொடா்ந்து யாகசாலையில் இருந்து திருக்குடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு ஸ்ரீ சங்கரகோமதி அம்பாள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு பூஜைகள், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு பங்கேற்று தரிசனம் செய்தாா்.

பின்னா், லட்சுமி சீனிவாசா வித்யாலயா மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற அமைச்சா், நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள பள்ளியின் முதல்வா் வசந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தாா். அப்போது, பள்ளி தாளாளா் கோவிந்தராஜ், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதில், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சந்திரசேகா், அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலா்கள் அய்யாத்துரைப்பாண்டியன், அன்புராஜ், இனாம்மணியாச்சி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் மகேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com