எட்டயபுரம் அருகே லாரி ஓட்டுநா் தற்கொலை

எட்டயபுரம் அருகே லாரி ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

எட்டயபுரம் அருகே லாரி ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

எட்டயபுரம் அருகே சமத்துவபுரத்தைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் லட்சுமணன் (22). லாரி ஓட்டுநரான இவா், புதிதாக வாங்கிய விலை உயா்ந்த செல்லிடப்பேசியை தொலைத்துவிட்டாராம். இதை இவரது தந்தை கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த லட்சுமணன் திங்கள்கிழமை வீட்டைவிட்டு சென்றவா் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில் படா்ந்தபுளி காட்டுப்பகுதியில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த லட்சுமணனை அக்கம்பக்கத்தினா் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக தெரிவித்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com