ஆத்தூா் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிதியுதவி

ஆத்தூா் அருகே 3 குடிசை வீடுகள் தீ விபத்தில் எரிந்து முற்றிலும் சேதமானது. இதில் பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ நிதியுதவி வழங்கினாா்.

ஆத்தூா் அருகே 3 குடிசை வீடுகள் தீ விபத்தில் எரிந்து முற்றிலும் சேதமானது. இதில் பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ நிதியுதவி வழங்கினாா்.

ஆத்தூா் அருகே தலைப்பண்ணையூரைச் சோ்ந்த கணபதி மகன் மகராஜன்(52), அரிபுத்திரன் (53) மற்றும் அவரது மகன் கோபி(28) ஆகிய மூவருக்குச் சொந்தமான குடிசை வீடுகள் திங்கள்கிழமை தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

இதுகுறித்து தகவலறிந்த அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, அப்பகுதிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறி தலா ரூ. 10 ஆயிரம் நிதி உதவி வழங்கினாா். திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரி சங்கா் உள்ளிட்டோா் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com