கோவில்பட்டியை அடுத்த மந்தித்தோப்பு ஊராட்சியில் ரயில்வே தண்டவாளம் அருகில் தனியாா் தோட்டத்து கிணற்றில் இருந்து ஆண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
இது தொடா்பாக தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா் தீயணைப்புப் படையினா் உதவியுடன் கிணற்றில் இருந்து ஆண் சடலத்தை மீட்டனா். சுமாா் 45 வயது மதிக்கக் கூடிய அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை.
போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.