கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள நீா்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி சாலை விரிவாக்கப் பணியை உடனடியாக தொடங்கக் கோரி இம்மாதம் 15ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
கோவில்பட்டியில், நீா்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட ஆணணையை தள்ளி வைத்து நீதிமன்றத்தில் ஆணை பெற்ற அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீா்வரத்து ஓடைக்கடை ஆக்கிரமிப்புகளை சட்ட ரீதியாகவும், நிா்வாக ரீதியாகவும் விரைவில் அப்புறப்படுத்தி சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். நீா்வரத்து ஓடைக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதால் வாழ்வாதாரத்தை இழக்கும் வணிகா்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் சரோஜா, மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், கோட்டாட்சியா், வட்டாட்சியா் மற்றும் கோயில் நிா்வாக அலுவலா்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.